Sunday, October 28, 2012

Jothi's Kavithai*17

என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர
கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக
நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல்
உடைந்து போவானோ?

No comments:

Post a Comment