காலையில் நீ
தொலை பேசியில் உன்
நண்பனுடன்
உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி,
தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன்,
அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க
வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக
வேண்டாம்
என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன்
முகத்திலோ சிரிப்பு..
உடனே
அடுத்த
கேள்வி கேட்டேன்,
அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம்
என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில்,
சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும்
அனுபவித்தேன்...
No comments:
Post a Comment