Sunday, October 28, 2012

Jothi's Kavithai*25

உனக்காய் துடித்த ஓர்
இதயம்
உனக்காய்
மட்டுமே துடித்த ஓர்
இதயம்
ரத்தத்தை உணவாய்
மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய்
பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம்
கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம்
பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட
துடிக்கிறது முதியோர்
இல்லத்தில்!
என் மகன்
எப்படி இருக்கிறானோ என
நினைத்து?

No comments:

Post a Comment